Ad Widget

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,000ஐத் தாண்டியது

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி மேலும் 24 பேர் கோவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி உயிரிழந்தவர்களில் 20 ஆண்களும் நான்கு பெண்களும் அடங்குவர்.

11 ஆண்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒன்பது பேர் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

உயிரிழந்த பெண்களில், இருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இருவர் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

Related Posts