Ad Widget

நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யும்

ஊவா, வடக்கு, மேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, அம்பாறை, மாத்தளை, அநுராதபுரம், மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக் கூடிய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தெற்கு, கிழக்கு, வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related Posts