நாடளாவிய ரீதியாக சில பாகங்களில் 150 மி.மி மழை எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மாவட்டங்களில் இவ்வாறு அதிக மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சில பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.