Ad Widget

நாடுமுழுவதும் சுழற்சிமுறையில் மின்வெட்டு!

நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள இடங்களில் போதிய மழை இல்லாமை காரணமாக நாடுமுழுவதும் சுழற்சி முறையிலான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் பகல் வேளையில் மூன்று மணிநேரமும் இரவு வேளை ஒரு மணி நேரமும் நாடுமுழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

லக்ஸ்பான, மேல் கொத்மலை நீர் உற்பத்தி நிலையங்கள் உள்ள பகுதிகளில் மழைவீழ்ச்சி போதுமானதாக இல்லை என்பதால் நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலையுடனான காலநிலையால் ஏற்பட்ட அதிகரித்த மின்பாவனையை ஈடு செய்ய முடியாதுள்ளதாக மின் சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நீர் மின் உற்பத்தி நிலைய நீர் வீழ்ச்சி பகுதிகளில் செயற்கை மழையை உருவாக்கும் நடவடிக்கைகளையும் மின். சக்தி அமைச்சு முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts