Ad Widget

நாங்கள் சொல்வதைத்தான் கூட்டமைப்பும் சொல்கிறது – அங்கஜன்

நாங்கள் சொல்வதைப் போன்றுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒரு ஜனநாயகவாதி என்று சொல்லுகிறது எனத் தெரிவித்தார், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன்.

யாழ். சாவகச்சேரியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்களின் ஆதரவு இன்றும் இருக்கிறது. சம்பந்தன் ஐயா கூடச் சொல்லுகிறார் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு ஜனநாயகவாதி என்று, இந்த அரசு நீடித்தால் எமக்குத் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்று மாவை அண்ணனும் சொல்லுகிறார்.

அதைத்தான் நாங்களும் சொல்லுகின்றோம். மைத்திரிபால சிறிசேன எனது கட்சியின் தலைவர். அவருடைய நேரடி வேட்பாளர் நான். எனவே அவரைக் பயன்படுத்தி எங்களின் பக்கம் வைத்திருப்பதுதான் நமது கெட்டித்தனம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Related Posts