Ad Widget

நவீன முறையில் வாகன இலக்கத்தகடுகள்!

வானொலி சமிக்ஞைகள் மூலம் செயற்படும் தொழில்நுட்பத்தினைக் கொண்ட வாகன இலக்கத் தகடுகளை அறிமுகம் செய்யவிருப்பதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் வாகனங்களின் நடமாட்டத்தினை இலகுவாக பொலிஸாரினால் கட்டுப்படுத்த முடியும் எனவும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படும் புதிய வாகனங்களுக்கே இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் போலி இலக்கத் தகடுகளுடன் இடம்பெறும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை இதன்மூலம் இலகுவாக கண்டுபிடிக்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts