Ad Widget

நல்லதொரு இலங்கையை உருவாக்க நாமனைவரும் கைக்கோர்த்து முன்னோக்கிச் செல்வோம் – ஜனாதிபதி

முல்லைத்தீவு தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை !

mahiii

உங்கள் பகுதிக்கு வந்து உங்கள் மத்தியில் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். பௌத்த குருமார் மற்றும் அனைத்து சமய பெரியார்களிடமும் ஆசிர்வாதம்பெற்றவனாக உரையாற்ற விரும்புகிறேன்.
குறிப்பாக 30 வருட காலமாக நீங்கள் இருளில் மூழ்கியிருந்தீர்கள். இந்த 30 வருட காலத்தில் நீங்கள் பல்வேறு கஷ்டங்களை துன்பங்களை அனுபவித்தீர்கள். உங்களது வாழ்க்கை குறித்தும், உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை குறித்தும் ஏன் உங்கள் எதிர் கால வாழ்க்கை குறித்தும் உங்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இருக்கவில்லை.

கடந்த ஐந்து வருடங்களில் அந்த நிலைமையை மாற்றி உங்களுக்கு அச்சமில்லாத அமைதியான சூழலை ஏற்பத்திக் கொடுத்துள்ளோம். கடந்த கால இருண்ட யுகத்தை மாற்றி வளமான எதிர்காலத்தை நோக்கி பயணம் செல்ல வேண்டியுள்ளது. வட பகுதியில் 27 வருட காலமாக மாகாண சபை தேர்தல்கள் நடைபெறவில்லை அத்தேர்தலையும் நாமே நடத்தினோம்.

இந்த முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் எடுக்கும் முடிவு முழு நாட்டுக்குமான முடிவாகும். நீங்கள் எந்த அசசோடு இருக்கப்போகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இந்த பகுதிகளில் நாம் அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம்.

இங்குள்ள பாதைகளை பாருங்கள் ! பாடசாலைகளை பாருங்கள் ஆஸ்பத்திரிகளை பாருங்கள் மின்சார திட்டங்களை பாருங்கள் எல்லாமே நாம் உங்களுக்கு செய்துத் தந்துள்ளோம். மஹிந்தோய தொழில்நுட்ப ஆய்வு கூடங்களை அமைத்துத் தந்துள்ளோம். இந்த ஆய்வு கூடங்களின் மூலம் நீங்கள் உரிய பயனை பெற வேண்டும். தொழில் பயிற்சி நிலையங்களிலும் பயன் பெற வேண்டும்.இந்த அரசின் கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும்.

அரச சேவையை பொதுச்சேவையாக, பகிரங்க சேவையாக மாற்றினோம். இன்று அரச சேவை -சுவர்ணமயமான சேவை என்றால் அது மிகையாகாது. அரச சேவையாளர்களை 3லட்சமாக குறைப்பதற்குத்தான் கடந்த கால ஆட்சியாளர்கள் முயன்றார்கள் .ஆனால் நாம் அரச சேவையை கௌரவமான சேவையாக மாற்றியமைத்தோம். அரச சேவை என்பது ஏழை மக்களின் கண்ணீரை துடைக்கக்கூடியது.

கடந்த நவம்பர் மாத வரவு செலவு திட்டத்தில் ஒரு லட்சத்து 50ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு புதிதாக தொழில் வாய்ப்புகளை வழங்கவுள்ளேன்.அதற்காக தயாராகுமாறு இங்குள்ள இளைஞர் யுவதிகளையும் நான் கேட்டுக் கொள்கிறேன். பொய் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

சகல இன மக்களும் கைகோர்த்து முன்னோக்கிச் செல்லக்கூடிய சமுதாயத்தை கட்டி எழுப்பவுள்ளேன். இன ரீதியாக மத ரீதியாக பிரிந்திருந்தால் நாம் ஒருபோதும் முன்னேற மாட்டோம். நாடும் முன்னேற முடியாது. இந்நாட்டை சிலர் பின்னோக்கிச்செல்ல முனைகிறார்கள்.

ஈரான், லிபியா, பாலஸ்தீன், எகிப்து ஆகிய நாடுகளுக்கு நடந்த கதி என்ன? அதற்கு இடமளிக்க முடியாது. மீண்டும் பழைய யுகத்துக்குப்போக நாம் தயாரில்லை. பாகிஸ்தானில் கொடிய மதவாதிகள் சிறுவர் ஆசிரியர்கள் அதிபர் என 168 பேரை மிலேச்சத்தனமாக கொலை செய்துள்ளனர். இதனை கண்டித்த நான், பாகிஸ்தான் பிரதமருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டேன். மீண்டும் அத்தகைய ஒரு நிலைமைக்கு எமது நாட்டில் இடமளிக்க முடியாது.

பிறக்கப்போகும் பிள்ளைக்கும், பிறந்த பிள்ளைக்கும் நல்லதொரு இலங்கையை உருவாக்க வேண்டும். தலைவர்கள் எதுவும் சொல்லுவார்கள். ஆனால் அவர்களது பிள்ளைகள் இங்கில்லை.அவர்கள் கல்வி கற்பதும் வெளிநாடுகளில் தான். எனவே அவர்கள் ஏதேதோ சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால் சகல இன மக்களது பிள்ளைகளையும் பாதுகாக்க வேண்டிய உரிமை எனக்குண்டு. எனவே நல்லதொரு உலகத்தை கட்டியெழுப்புவதற்காக நாம் அனைவரும் கைகோர்த்து முன்னோக்கிச் செல்வோம்.

“அன்பர்கனே ! நண்பர்களே!சகோதர சகோதரிகளே! உங்கள் முன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை குறித்து எனக்கு மிகவும் சந்தோஷம். 30வருட யுத்தத்தை நிறுத்தி இந்த தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பினேன். நீங்கள் என்னை தெரிவு செய்தீர்கள். நீங்கள் இந்த நாட்டில் எங்கேயும் போகலாம்.வரலாம். பயப்பட தேவையல்லை. உங்கள் எல்லோருக்கும் நான் செய்த அபிவிருத்தி வேலைகளை நன்றாக பார்க்க முடியும்.

நண்பர்களே! வட மாகாண மக்களுக்கு பல பில்லியன் ரூபா செலவு செய்துள்ளேன். மன்சார வசதி சுகாதார வசதிகளை வழங்கியுள்ளேன். புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். நஷ்டஈடு வழங்கியுள்ளேன். தங்கங்களை கூட வழங்கியுள்ளேன். யாழ் தேவி இன்று மிகவும் கம்பீரமாக செல்கிறது. இந்த யாழ்தேவியை மாங்குளத்திலும் நிறுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளேன். உங்கள் பிள்ளைகளை பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும். இனவாதம் பேசுபவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் உள்ளார்கள்.

இரண்ட யுகம் 30 வருடங்கள் அபிவிருத்தி 5 வருடங்கள். வடக்கில் வசந்தம் உங்கள் வசந்தம் உங்கள் பிள்ளைகளின் வசந்தம் நான் உங்களை பாதுகாப்பேன். பின்னோக்கி செல்லாமல் முன்னோக்கி செல்வோம் வெற்றிலை சின்னம் வெற்றியின் சின்னம். அது உங்கள் சின்னம் என்பதை மறந்து விட வேண்டாம்”.

Related Posts