Ad Widget

த.தே.கூ அரசாங்கத்தில் இணையக் கூடாது!

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்திலேயோ அல்லது சர்வ கட்சியிலேயே இணையக் கூடாதென கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் ஈழத் தமிழரின் நிலை என்ன என்பது பற்றி தெரியவில்லை. தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆணையை கோருகின்றது. தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படையில், வட, கிழக்கு இணைந்த இணைப்பாட்சியை மக்களிடம் கோருகின்றது.

இந்த சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஏனைய கட்சிகளையும் தேசிய அரசாங்கத்தில் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்திலேயோ, சர்வ கட்சி அரசாங்கத்திலேயோ இடம்பெற கூடாதென்பதே தமது நிலைப்பாடு என்றார்.

Related Posts