Ad Widget

தேர்தல் ஒன்றை நடத்துவதன் நோக்கம் கூட சிலருக்கு தெரியாது – பிரதமர்

பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை நடத்துவதன் உண்மையான நோக்கம் என்னவென்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு போதிய விளக்கமில்லை என்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தனிப்பட்ட நபர் ஒருவரின் நலனுக்காக மாத்திரம் நடைபெறும் தேரதல் அல்ல என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நாத்தாண்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதவிர நிகவரெடிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது, தற்பொழுது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற சிக்கலில் கூட்டமைப்பினர் மாட்டியிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Related Posts