Ad Widget

தேர்தலுக்கு முன்பாக நியமனங்களை வழங்குங்கள்: வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

“தேர்தலுக்கு முன்னர் நியமனங்களை வழங்கு” என வலியுறுத்தி, வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் முன்னால் கூடிய வேலையற்ற பட்டதாரிகள் இன்று (புதன்கிழமை) செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, கௌரவ பிரதமரே..! யாழ் வருகையின்போது தந்த வாக்குறுதிகள் எங்கே?, தேர்தலுக்கு முன் அபிவிருத்தி உத்தியோக நியமனங்களை வழங்கு…! போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு, கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வடக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தொடா்ச்சியாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனா். அவா்களின் கோரிக்கை தொடா்பில் அரசாங்க தரப்பில் இருந்தும் அரசியல்வாதிகளிடமிருந்தும் அவ்வப்போது பல்வேறு உறுதிமொழிகள் வழங்கப்படுகின்ற போதிலும் இதுவரை உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், உள்ளுராட்சி தோ்தல் தொடா்பான செய்திகள் வெளியாகி வருகின்ற நிலையில், குறித்த தோ்தலுக்கு முன்பாக தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனா்.

Related Posts