Ad Widget

தேர்தலில் கொழும்பிலும் போட்டியிட கூட்டமைப்பு திட்டம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த தீர்மானம் குறித்த இறுதி முடிவுகள் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு பின்னரே அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைவது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts