Ad Widget

தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை யாழ்ப்பாணத்தில்!

தேசிய மீலாதுன் நபி விழாவை யாழ்ப்பாணத்தில் இம்முறை நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மீலாதுன் நபி விழாவை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதன் மூலம் அந்த பகுதியிலுள்ள மக்களுக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வின் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, யாழ். குடா நாட்டில் வீடில்லா பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts