Ad Widget

“தேசியத்தலைவர் பிரபாகரனை விற்றுப்பிழைத்து அரசியல் நடத்த வேண்டாம்” – திரு ந.அனந்தராஜ்

மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டமானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

என்றுமில்லாதவாறு பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தமை தமிழர்கள் எப்போதும் விலைபோகதவர்கள் என்பதை மீண்டும் ஒருதடவை உணர்த்தியுள்ளது.

மேற்படி இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வடமராட்சியின் ஒரு சிறந்த கல்வியியலாளரும் முன்னணி வேட்பாளருமாகிய திரு.ந.அனந்தராஜ் தேர்தல் பரப்புரைகளுக்காகவும் தமது சுயலாபத்திற்காகவும் எமது உன்னதமான பெரும் தலைவர் தேசியத் தலைவர் பிரபாகரனை விற்றுப் பிழைத்து எவரும் அரசியல் நடந்த அரசியல் நடத்த வேண்டாம் என மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எமக்காக எமது இனத்திற்காக போராடிய ஒரு பெருமைமிக்க பெருந்தலைவனையோ அவரது பெயரையோ விற்றுப்பிழைத்து அரசில் நடத்த வேண்டாம் என்றும் அவ்வாறு அரசியல் நடத்துபவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டாம் என்றும் மிக ஆணித்தரமாக குறிப்பிட்டார்.

Related Posts