Ad Widget

தென்மராட்சியில் குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

தேசிய சமூக நீர் வழங்கல் செயற்றிட்டத்தின் கீழ் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவு மக்களுக்கான சுத்திகரித்த நீர் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த திட்டத்தினை தமிழரசு கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆரம்பித்து வைத்துள்ளார். குறித்த திட்டத்தின் கீழ் நாளாந்தம் 10,000 லீற்றர் நீர் சுத்திகரித்து வழங்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கான காணியை கணபதிப்பிள்ளை கனகம்மா என்பவர் நன்கொடையாக வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts