Ad Widget

துணை மருத்துவ சேவை ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

​பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட துணை மருத்துவ சேவையைச் சேர்ந்த எட்டு தொழிற்சங்கங்கள், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு அடையாள பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

மருந்தக ஊழியர்களை, துணை சுகாதார சேவைக்குள் ஒன்றிணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, துணை மருத்துவ சேவை ஒன்றிணைந்த முன்னணியின் ஊடகச் செயலாளர் நஜித் சுமனசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் மலேரியா ஒழிப்பு வேலைத்திட்டம், யானைக்கால் ஒழிப்பு வேலைத்திட்டம், இருதய சத்திர சிகிச்சை, தேசிய கண் வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட துறைகளில் பணி புரிபவர்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.

Related Posts