Ad Widget

தீபாவளியால் யாழ்.மாநகர சபைக்கு ரூ. 10 இலட்சம் வருமானம்

தீபாவளி பண்டிகைக்காக மாநகர எல்லைக்குள் கடைகள் அமைக்க இடங்கொடுத்து பெற்ற வாடகைகள் மூலம் யாழ்.மாநகர சபைக்கு 10 இலட்சத்து ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் இன்று வியாழக்கிழமை (23) தெரிவித்தார்.

யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட பண்ணைப்பகுதி மற்றும் புல்லுக்குளத்தை அண்மித்த பகுதிகளில் தீபாவளி கடைகள் அமைப்பதற்கு அனுமதியளித்திருந்தோம்.

கடைகள் அமைத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தென்னிலங்கை வியாபாரிகள் ஆவார்கள்.
10 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட கடை அமைப்பதற்கு 15 ஆயிரம் ரூபாய் வாடகை அறவிடப்பட்டது.

மழை காரணமாக வியாபாரம் இடம்பெறாத சில வியாபாரிகளிடம் வாடகைகள் அறவிடப்படவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts