Ad Widget

தீக்காயங்களுக்குள்ளாகிய பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதி

எரிந்துகொண்டிருந்த அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றியபோது, தீக்காயங்களுக்குள்ளாகிய பெண்ணொருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (03) அனுமதிக்கப்பட்டுள்ளார் என, யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், அபூபக்கர் வீதியைச் சேர்ந்த பிரபாகரன் தயாபதி (வயது 40) என்பவரே தீக்காயங்களுக்குள்ளானார்.

எரிந்து கொண்டிருந்த அடுப்புக்கு மேலதிகமாக மண்ணெண்ணெய்யை ஊற்றியதில் உடலில் தீ பற்றியதால் தீக்காயங்களுக்குள்ளாகிய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

Related Posts