Ad Widget

திலீபனின் நினைவிடத்தில் துப்பரவு பணி

யாழ். நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைத்தூபியில் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

திலீபனின் நினைவுதினம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் திலீபனின் நினைவிடத்தில் துப்பரவு பணிகளை மேற்கொண்டனர்.

திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடம், எவ்வித பாதுகாப்பு வேலிகளோ பராமரிப்போ இன்றி காணப்படுகிறது. இந்நிலையில், குறித்த நினைவிடத்திற்கு எல்லையிட்டு வேலி அமைத்து, யாழ். மாநாகர சபை அதனை பொறுப்பேற்று பாதுகாக்க வேண்டுமென அண்மையில் வடக்கு மாகாண சபையில் பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts