Ad Widget

திருநெல்வேலியில் பனம் பாத்திக்குள் இருந்து சக்தி வாய்ந்த கைக்குண்டுகள் மீட்பு

Hand-bombயாழ். திருநெல்வேலி பாரதிபுரத்தில் பனம்பாத்திக்குள் இருந்து இரண்டு சக்திவாய்ந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

கைக்குண்டுகள் அனைத்தும் நேற்று பிற்பகல் கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

பனம் பாத்தியை வெட்டியபோது இக்குண்டுகள் கறுப்பு நிற பையென்றில் சுற்றிக் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகைளை மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட கைக்குண்டுகளை பொலிஸார் எடுத்துச் சென்று செயலிழக்கச் செய்துள்ளனர்.

Related Posts