Ad Widget

திருடிய ஆடுகளை விற்க முயன்ற மூவர் கைது

arrest_1யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில், திருடிய ஆடுகளை விற்க முயன்ற மூவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் இன்று காலை 6.15 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.தாவடிப் பகுதியில் திருடிய மூன்று ஆடுகளை விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர்களே இவ்வாறு யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். பொலிஸ் நிலைய எஸ்.ஐ.ஜெயன்த தலைமையிலான குழுவினருக்கு, சிவில் பாதுகாப்புக் குழுவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஆடுகளைத் திருடியதாக சந்தேகிக்கும் மூவரையும் கைதுசெய்துள்ளதுடன், மூன்று ஆடுகளையும், அதனைக் கொண்டுசென்ற வடி ரக வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரையும் நாளைய தினம் யாழ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts