Ad Widget

தாய் கொடுத்த புத்தாடை பகிர்வதில் அண்ணன் தம்பி இடையே மோதல்: அண்ணன் அடித்துக் கொலை!

புதுவருடத்திற்கு தாய் வாங்கிக் கொடுத்த ஆடைகளை பரிந்து கொள்வதில் மகன்மார்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த துரதிஸ்டவசமான செய்தி முல்லைத்தீவு – முல்லியாவெலி கண்ணீரூற்று பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இரு சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற இந்த மோதலில் மூத்த சகோதரர் (19 வயது) கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் நடத்திய இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முல்லைத்தீவு நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Related Posts