Ad Widget

தாதியர்களை உருவாக்க யாழ்.வணிகர் சங்கம் நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் தனியார் வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கு 10 பெண்பிள்ளைகளுக்கு மருத்துவ தாதி பயிற்சிகளை வழங்கி வேலைவாய்பையும் ஏற்படுத்தி கொடுப்பதற்கு யாழ் வணிகர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வணிகர் சங்கத்தலைவர் ஆர்.ஜெயசேகரம் புதன்கிழமை (29) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 10 பெண் பிள்ளைகள் தெரிவுசெய்யப்பட்டு 6 மாத கால பயிற்சியை வழங்கி பின்னர் தனியார் வைத்தியசாலைகளில் வேலைவாய்பையும் வழங்கவுள்ளோம். இதற்கான பயிற்சிகள் வியாழக்கிழமை (30) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த திட்டத்திற்கு முதற்கட்ட நிதியாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி குறித்த பயிற்சி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளோம்.

அத்துடன் யாழ் மாவட்டத்திலுள்ள ஒவ்வெரு பிரதேச செயலகங்களிலும் இருந்து வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 15 பேர் தெரிவுசெய்யப்பட்டு சிறுகைத்தொழிலுக்கு தலா 10,000 ரூபாய் நிதி அடுத்த மாதம் வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts