Ad Widget

தலைமைத்துவ பயிற்சிக்கு சென்ற மாணவன் மரணம்

dead-footபல்கலைக்கு தகுதி பெற்றவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிக்கு சென்ற மாணவன் ஒருவன் நேற்று கண்டி வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

அதன்படி இந்த ஆண்டுக்கு பல்கலைக்கு தகுதி பெற்றவர்களில் ஒரு பகுதியினருக்கு கண்ணொருவ இராணுவ முகாமில் தலைமைத்துவப் பயிற்சி பெற்று வருகின்றது.

லஹிரு சந்தருவான் என்ற மாணவனுக்கு வயிற்றில் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 28 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். எனினும் அவர் நேற்று மரணமடைந்துள்ளார்.

குறித்த மாணவன் யாழ். பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை ஏற்கனவே இடம்பெற்ற பயிற்சிகளின் போதும் பல மாணவர்களுக்கு கால் முறிவு மற்றும் உணவு ஒவ்வாமை போன்ற காரணங்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts