Ad Widget

தலைக்கு மருத்துநீர் பூசும் தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

தலைக்கு மருத்துநீர் பூசும் தேசிய நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி 9.06 மணிக்கு பிறக்கு சுபநேரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கதுருவெல ஜயந்தி விகாரையில் நடைபெறவுள்ளது.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ திணைக்களத்தினால் வடமத்திய மாகாண கதுருவெல விகாராதிபதி கதுருவெல தம்மபால தேரர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் யானைகளுக்கும் தலைக்கெண்ணெய் பூசும் நிகழ்வு நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் சுகாதார மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Related Posts