Ad Widget

தரமற்ற மதிய உணவு – பாடசாலை முன்பாக போராட்டம்

யா/ மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாலயத்தின் முன்பாக பாடசாலை மாணவர்களின் பெற்றோரும், நலன்விரும்பிகளும் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

maravanpuloo-school

பாடசாலை மாணவர்களுக்கு மதியம் வழங்கப்படும் சத்துணவு சுகாதாரக் கேடான நிலையில், வண்டுகளும் பூச்சிகளும் நிறைந்து காணப்படுவதாகத் தெரிவித்தே அவர்கள் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, தனது அரைக்கும் ஆலையில், பாடசாலை மாணவர்களுக்காக வழங்கும் தானிய வகைகளை அரைப்பதற்கு எடுத்துவந்தபோது, அதில் வண்டுகள் காணப்பட்டதை அடுத்து அது தொடர்பாக பாடசாலை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய போதும் தொடர்ந்தும் இவ்வாறு தரமற்ற தானியங்கள் அரைக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றார் அரைக்கும் ஆலையின் உரிமையாளர் மார்க்கண்டு கோபால கிருஷ்ணன்.

சம்பவத்தை அறிந்த தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.

Related Posts