யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை முதல் உண்ணாரவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அடக்கு முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் கழிவொயில் வீச்சியுள்ளனர்.
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த வலியுறுத்தியும் இடம்பெயர்ந்த மக்களுக்கு இடைநிறுத்தப்பட்ட நிவாரணத்தை மீண்டும் வழங்கக் கோரியும் இவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஏற்கெனவே கடந்த வருடம் (2013) இரண்டு முறை உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்ட இவர் அந்தப் போராட்டங்களை 2 மற்றும் 4 நாட்களில் கைவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (19) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவர் மீது கழிவொயில் தாக்குதல் மேற்கொண்டுவிட்டுச் சென்றுள்ளதாகத் தம்பிராசா தெரிவித்தார்.
இதுதொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்தி