யாழ். பாதுகாப்புப் படைப்பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒரு மாதகால தமிழ் மொழி கற்கும் பயிற்சி நெறியில் சித்தி பெற்ற 1633 இராணுவத்தினருக்கான சான்றிதழ்கள், காங்கேசன்துறையில் அமைந்துள்ள தல்சேவன விருந்தினம் விடுதியில் வைத்து வெள்ளிக்கிழமை (29) இரவு வழங்கப்பட்டன.
32 அதிகாரிகள் மற்றும் 1601 இராணுவச் சிப்பாய்கள் உள்ளடலங்கலாக 1633 பேர் இந்தச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.
மேற்படி பயிற்சிநெறி கடந்த ஜூலை மாதம் இடம்பெற்றது.
2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து இராணுவத்தினரும் தமிழ் மொழி கற்றுவிடுவார்கள் என யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா தெரிவித்தார்.