Ad Widget

தமிழினியின் இறுதிஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்படும் அமரர் சிவசுப்ரமணியம் சிவகாமியின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இறுதிக் கிரியைகள் பரந்தன்-சிவநகரிலுள்ள அவரது இல்லத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்று பரந்தன் சிவபுரம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்வதற்காக அன்னாரின் பூதடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொண்டு , தமது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

அமரர் தமிழினியின் இறுதி ஊர்வலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச அரசில் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், நாட்டுப்பற்றாளர்கள், பாடசாலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் பங்கெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

tamilini

தொடர்புடைய செய்தி மற்றும் படங்களுக்கு…

Related Posts