இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் உட்பட புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்காக தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை இன்று காலை (06) கூடியுள்ளது.
கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் காலை 9.30க்கு ஆரம்பமான நிகழ்வுகளில் 160 பொதுச்சபை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட கடசியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.
இதனையடுத்து நாளை இடமபெறவுள்ள கட்சியின் மாநாட்டில் வெளியிடப்படும் தீர்மானங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.
இன்றைய நிகழ்வுகளில் தமிழ் தேசியத்தின் பதிவுகள் என்ற தலைப்பிலான புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றிருந்ததுடன் மாலை 02.00 மணிக்கு தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி மாநாடும் இடம்பெறும்.