Ad Widget

தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவு

இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் மேற்படி படகுகளை விடுவிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விடுவிக்கப்படவுள்ள படகுகள் கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ம் திகதியிலிருந்து நவம்பர் 10ஆம் திகதி வரை கைப்பற்றப்படவை எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

மேலும் விடுவிக்கப்படும் இந்த படகுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இவை நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு சொந்தமான படகுகள் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts