Ad Widget

தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக தாயகம் திரும்பியோர் காங்கேசன்துறையில் கைது!

தமிழக ஈழ அகதிகள் முகாமிலிருந்து சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 14 பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டனர் என கடற்படையினர் தெரிவித்தனர்.

திருகோணமலையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் விசாரணைகள் மற்றும் மலேரியா தடுப்பு பரிசோதனையின் பின்னர் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்” என்று கடற்படையினர் தெரிவித்தனர்

பொலிஸாரின் விசாரணையின் பின்னர் 14 பேரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

Related Posts