Ad Widget

தபால்மூல வாக்களிப்பு: யாழில் 90 வீதமான வாக்குகள் பதிவு

யாழ்.மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பில் 90 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் அலுவலகத்தின் உத்தியோகப்பூர்வ தகல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் திணைக்கள கண்காணிப்பாளர்கள் மற்றும் ஏனைய கண்காணிப்பு அமைப்பாளர்களின் காண்காணிப்புடன் எந்தவிதமான குழப்பங்களும் இல்லாமல் அமைதியான முறையில் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளது என்றும் அலுவலகத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த 3ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ந்து 5 மற்றும் 6ஆம் திகதிகளிலும் வாக்களிப்பு நடைபெற்றது.

இந்நிலையில் தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பித்தவர்களில் 90 வீதமானவர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாக்களிப்பு நடவடிக்கைகள் தீவிர கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றிருந்த நிலையில், சுமூகமான முறையில் வாக்களிப்புகள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts