Ad Widget

தனியார் வைத்தியசாலைகளுக்கு புதிய சட்டம்

தனியார் வைத்தியசாலைகளுக்கு வருகின்ற நோயாளிகளுக்கு, வழங்கும் மருந்துகள் மற்றும் பயன்படுத்தும் வைத்திய உபகரணங்களின் விலைகளை குறிப்பிட்டு கட்டணப்பட்டியல் விநியோகிக்கப்படவேண்டும் என்று நுகர்வோர் அதிகார சபை, தனியார் வைத்திய நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளது.

சில தனியார் வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கு வழங்குகின்ற கட்டணப்பட்டியிலில் மருந்து மற்றும் வைத்திய உபகரணங்களின் விலைகள் உண்மையான விலைகளை விடவும் கூடுதலான விலைகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அவற்றை கவனத்தில் கொண்டே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டது என்று நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ.எச்.எம். டக்ளஸ் தெரிவித்தார்.

அதன் பிரகாரம் கட்டணப்பட்டியலில் நோயாளர்களுக்கு வழங்கும் சகல வசதிகளையும் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். என்று தெரிவித்துள்ள அதிகார சபை, இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Related Posts