பளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ்தேவி ரயில் மஹவ பிரதேசத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் வட பகுதிக்கான ரயில் சேவை மஹவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதிஸ்டவசமாக ரயிலில் பயணித்த பயணிகளுக்கு எதுவித ஆபத்துக்களும் ஏற்படவில்லை எனவும் மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.