Ad Widget

டெங்கை ஒழிக்க ஓட்டோ படையணி

டெங்கு நோய் குறித்து மக்களை விழிப்படையச் செய்யும் நோக்கில் யாழ்.மாவட்ட செயலகத்தினால் முச்சக்கரவண்டி படையணியொன்றை உருவாக்கி அதன் மூலம் மக்களை விழிப்படையச் செய்யும் திட்டம் ஒன்று எதிர்வரும் மாதம் 27ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது.

dak-suntharam-arumainayagam-GA

நேற்று பி.ப 2 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது இதன் போது யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் முச்சக்கரவண்டி சாரதி சங்கத்தின் ஒத்துழைப்புடன் முச்சக்கர வண்டியூடாக டெங்கு ஒழிப்பு தொடர்பாக விளம்பரப்படுத்தி மக்களை இந்த நோய் தொடர்பில் விழிப்படையச் செய்வதே இதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts