Ad Widget

ஜெயலலிதாவின் மறைவு இலங்கை தமிழ் பேசும் மக்களுக்கு பேரிழப்பு : சம்பந்தன்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெராமின் மறைவு தமிழ்நாடு மக்களுக்கு மாத்திரமல்லாமல் இலங்கை தமிழ் மக்களுக்கும் பாரிய இழப்பாகும் என எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவு தொடர்பில் அவர் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

“இலங்கை தமிழ் பேசும் மக்களின் பிச்சினைகள் தொடர்பில் அவர் விசேட கவனம் செலுத்தினார். இது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல தீர்மானங்கள் கொண்டுவர காரணமாக இருந்ததுடன் மத்திய அரசுடன் இலங்கை தொடர்பில் அடிக்கடி தொடர்புகளை பேண காரணமாக இருந்தது”, என அந்த அனுதாப செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts