ஜப்பானிய அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

ஜப்பானிய அரசாங்கம் மற்றும் ஜப்பானின் யோகோஹாமா நகர மக்களால் கூட்டாக அன்பளிப்பாக வழங்கப்பட்ட இந்த ஏழு புதிய பேருந்துகளையும் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மேன்மைதங்கிய அகியோ இசொமாட்டாவின் (Akio Isomata) பங்குபற்றலுடன் இடம்பெற்றது.