அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்ற காலநிலை உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட சமயம் இருவரும் சந்தித்து கொண்டனர். இதேவேளை, நேபாள பிரதமர் சுசில் கொய்ராலா, கொலம்பிய ஜனாதிபதி யுவான் மனுவல் சண்டோஷ் மற்றும் பொதுநலவாய செயலாளர் கமலேஸ் சர்மா ஆகியோரையும் தனித்தனியே சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸும் கலந்துகொண்டார்.