நல்லாட்சி ஆரம்பிக்கப்பட்டு சில வருடங்கள் கடந்துள்ள நிலையில் ஜனாதிபதி பல தடவைகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.
இருப்பினும் நயினாதீவு நாகவிகாரைக்கு இதுவரை விஜயம் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் நயினாதீவு நாகவிகாரை விகாராதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க நேற்றய தினம் ஜனாதிபதி நயினாதீவு நாக விகாரைக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.