Ad Widget

ஜனாதிபதி தொடர்பில் பொய் பிரசாரம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகவீனமுற்றுள்ளார் என்றும் அதற்கு சிகிச்சை பெறுவதற்காகவே அவர் அமெரிக்கா சென்றார் என்றும் முகப்புத்தகத்தினூடாக பொய் பிரசாரங்களைச் செய்யும் எதிர்க்கட்சிகள், அதன்மூலம் சந்தோஷப்பட்டு வருகின்றனர் என இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

mahintha amaraweera_CI

ஜனாதிபதி நலமாக உள்ளார். அவர் சுகவீனமுற்றார் என்பது பொய். அவர் இன்னும் நீண்ட காலத்துக்கு இந்த நாட்டை ஆட்சி செய்வார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்ட அமைச்சர் அமரவீர, தனிப்பட்ட காரணத்துக்காகவே அவர் அமெரிக்கா சென்றார் என்றும் கூறியுள்ளார்.

Related Posts