ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அதன் முன்னேற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தின் அரச அதிபர் காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(26) இடம்பெற்றுள்ளது.
ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் சந்திரிசிறி, வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் படைத்துறை அதிகாரிகள் அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.