ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் மாகாண முதலமைச்சர்களுக்குமிடையில் நேற்று (22) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஜனாதிபதியின உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தகலந்துரையாடலில் நிதிஅமைச்சர் ரவிகருணாநாயக்கவும் கலந்துகொண்டார்.
இங்கு மாகாணமட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்கள் மற்றும் எதிர்காலதிட்டங்கள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது மாகாண அமைச்சர்கள் தமது பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு தெளிபடுத்தினர். இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.