Ad Widget

செய்தியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: சிவாஜிலிங்கம்

sivajilingam_tna_mp‘யாழ். மாவட்டத்தில் தொடாச்சியாக செய்தியாளர்கள் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் முன்வரவேண்டும்’ என தமிழர் விடுதலை இயக்க (ரெலோ) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இந்த வருடத்தில் மட்டும் தொடர்ச்சியாக 4 செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு செய்தியாளர்கள் தாக்கப்படுவதனால் யாழ்ப்பாணத்தில் பத்திரிகை சுதந்திரம் அழிந்து போகின்றது. பத்திரிகை சுதந்திரத்தினை கட்டி எழுப்பவும், சமாதானத்தினை ஏற்படுத்தவும், அரசாங்கம் முன்வந்து தாக்குதல் சூத்திரதாரிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாது அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் இருப்பதனால் மேலும் செய்தியாளர்கள் தாக்கப்படுவதுடன், ஊடக சுதந்திரமும் அழிந்து விடும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘செய்தியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கும், ஊடக சுதந்திரத்தினை நிலை நிறுத்தவும், அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். செய்தியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்றும் அவர் கூறினார்.

Related Posts