Ad Widget

செம்மணிப் பகுதியில் ஆசிரியையை மீது பாலியல் தொந்தரவு!!

நேற்று மதியம் செம்மணிப் பகுதியில் நடந்த சம்பவத்தால் ஆசிரியை ஒருவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தென்மராட்சிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் திருமணமான ஆசிரியை அவசர தேவை நிமிர்த்தம் பாடசாலையில் அரை நாள் விடுமுறையில் நல்லுார்ப் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

செம்மணிப் பகுதியில் ஆசிரியையின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த காவாலிகள் இருவர் ஆசிரியையை வழி மறித்து அவரை கடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியுள்ளனர்.

ஒருவன் ஆசிரியையைப் பிடித்துக் கொண்டிருக்க இன்னொருவன் ஆசிரியை மீது கைகளால் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான்.

துாரத்தில் இன்னொரு மோடார் சைக்கிள் வருவதைக் கண்டு அவர்கள் ஓடித்தப்பியுள்ளனர்.

அதிர்ச்சியில் உறைந்து போய் நின்ற ஆசிரியையை அப்பகுதியால் வந்தவர்கள் பாதுகாப்பாக வீடுவரை கொண்டு சென்று விட்டதாகத் தெரியவருகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக ஆசிரியை பொலிசாரிம் முறையிட மறுத்துவிட்டதாகவும் தனது பாதுகாப்புக் கருதி அவர் அவ்வாறு செயற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

Related Posts