யாழ். சென்.பற்றிக் கல்லூரியின் பழைய மாணவன் டாக்டர் லக்ஷமன் டேவிட், பிரிகேடியராகவிருந்து மேஜர் ஜெனராலாக பதவியுயர்வு பெற்றுள்ளார். அவரை கௌரவிக்கும் முகமாக பாடசாலை சமூகத்தினால் கௌரவிப்பு நிகழ்வொன்று நேற்று (13) நடத்தப்பட்டது.
கல்லூரி அதிபர் வணக்கத்திற்குரிய எம்.ஜெரோசெல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயப் பெரேராவும் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வின்போது பாடசாலை அதிபரினால் டேவிட்டிற்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.