Ad Widget

சுதந்திரக் கட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவில் நல்லூரில் வழிபாடு

சிறிலங்கா சுதந்திரகட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் இன்று ( செப்.2) காலை ருத்திராபிஷேகமும் சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்றன.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், “சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டை மேற்கொண்டுள்ளோம்.

முதன் முதலாக சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு ஆசனம் கிடைத்திருக்கிறது. இந்த அரசில் சிறிலங்கா சுதந்திர கட்சி இணைந்து மக்களுடைய அனைத்து தேவைகளையும் நிறைவு செய்வதற்கு இறைவனுடைய அருள் துணை நிற்க வேண்டும்.

அதே நேரம் சிறிலங்கா சுதந்திர கட்சி மிகப்பழமையான கட்சி. அதனுடாக அரசுடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்ற இறைவன் துணையிருக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்” என்றார்.

Related Posts