Ad Widget

சுகாதார உதவியாளர்களுக்கு 3 மாதங்களாக சம்பளமில்லை, ஆளுநரிடம் முறைப்பாடு

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றும் 10 பேருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட உத்தியோகஸ்தர்கள் வடமாகாண ஆளுநர் எச்.என்.ஜி.எஸ்.பளிஹக்காரவிடம் இன்று (11) தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நியமனம் பெற்ற இவர்கள், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றனர். முதல் மூன்று மாதங்களும் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ள போதிலும் கடந்த டிசம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை.

தங்களுக்கு வழங்கப்படாதுள்ள சம்பளத்தை வழங்குமாறு பாதிக்கப்பட்ட சுகாதார உதவியாளர்கள், ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Related Posts