Ad Widget

சிலிண்டர் வெடித்து பெண் சாவு

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்த சம்பவமொன்று பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.

ஜெயசிங்கம் றெஜிவதனி (வயது 51) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த பெண் மண்ணெண்ணெய் அடுப்பில் சமைத்துக்கொண்டிருந்த வேளை தீப்பற்றி விசாலமாக எரியத் தொடங்கியுள்ளது.

விசாலமாக எரிந்த தீ அருகிலிருந்த எரிவாயு சிலிண்டர் மீது தீப்பற்றியதில் சிலிண்டர் வெடித்துள்ளது.

இதில் படுகாயமடைந்த குறித்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். மேலும் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. –

Related Posts