Ad Widget

சிறுவர் இல்லத்தில் கைவரிசை: இருவர் கைது

யாழ்ப்பாணம் மானிப்பாயிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்த நான்கு மின்விசிறிகளை திங்கட்கிழமை(22) இரவு திருடிய குற்றச்சாட்டில் மானிப்பாயை சேர்ந்த இளைஞர்கள் இருவரை செவ்வாய்க்கிழமை(23) மாலை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் புதன்கிழமை (24) தெரிவித்தனர்.

சிறுவர் இல்லத்திலிருந்த தலா 4000ரூபாய் பெறுமதியான மின்விசிறிகள் இவ்வாறு திருடப்பட்டிருந்தன.

இது தொடர்பில் சிறுவர் இல்ல நிர்வாகத்தினர் பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை(23) மேற்கொண்ட முறைப்பாட்டினை அடுத்து, 21 மற்றும் 22 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்கள்.

Related Posts