Ad Widget

சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல்போன சிறுமிகள் கண்டுபிடிப்பு!!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்திலிருந்து மூன்று சிறுமிகள் காணாமல்போன நிலையில் அவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல்போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் எனவும், இந்த சிறுமிகள் பருத்தித்துறை பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமிகள், சிறுவர் இல்லத்தில் வசிப்பதற்கு விருப்பமில்லை என தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், பின்னர் விசாரணைகளின் பின்னர் சிறுமிகள் மூவர் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Posts